இலங்கையை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள்
செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 158,971 என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 30.24 சதவீதம் அதிகமாகும் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
செப்டம்பரில், இந்தியாவில் இருந்து 49,697 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது சதவீதமாக 31.3 சதவீதம் ஆகும்.
கடந்த செப்டம்பரில் பிரித்தானியாவிலிருந்து 10,527 சுற்றுலாப் பயணிகள், ஜெர்மனியிலிருந்து 9,344 சுற்றுலாப் பயணிகள், சீனாவிலிருந்து 10,527 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 5,144 பிரெஞ்சு நாட்டினரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,494 ஆகும்.
இவர்களில், இந்தியாவிலிருந்து 375,292 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 122,144 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 161,893 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.





