இந்தியா

இலங்கை வாழ் தமிழர்களின் படுகொலைக்கும் காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணி தான்: : பிரேமலதா விஜயகாந்த் ஆவேச பேச்சு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் தனி அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் மன வளர்மதி அவர்கள் முன்னிலையில் தேசிய திராவிட முற்போக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் 1967 ஆம் ஆண்டிலேயே கலைஞரும் இந்திரா காந்தி அம்மையாரும் நம் உரிமைகளை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள்.

அன்றிலிருந்து ஆரம்பித்தது தான் நம் மீனவர்கள் பிரச்சனை, இன்றுவரை தொடர்கின்றதாகவும்,
பிரதமர் பத்து வருடங்களாக இருந்து மிகவும் தாமதமாக இன்று தான் அது குறித்து பேசுவதாகவும்,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் காலம் கடந்து பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளதாகவும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கச்சத்தீவை மட்டும் விட்டுத் தரவில்லை,காவேரி பிரச்சனையையும் விட்டுக் கொடுத்துள்ளதாகவும், இலங்கை வாழ் தமிழர்களின் படுகொலைக்கும் காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணி தான் என்பதை யாரும் மறக்க முடியாது என உரையாற்றினார்.

எனவே இனிவரும் தேர்தல்களில் அதிமுக தேமுதிக ஒன்றிணைந்த இந்த மகத்தான கூட்டணியை வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும், வாய்ப்பு தர வேண்டும் என உரையாற்றினார்.

மேலும் வரம் ஏப்ரல் 19ஆம் தேதி காலையிலே அனைவரும் வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்களுடைய ஓட்டு கள்ள ஓட்டாக மாற்ற திமுக காரர்கள் தயாராக உள்ளதாகவும்,ஆட்சி பலம் அதிகார பலம் பண பலத்தை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கேடை உருவாக்கி எல்லா தொகுதிகளிலும் ஜெயிக்க எல்லா வன்முறைகளையும் கட்டமைக்க தயாராக உள்ளனர்.இந்த இளைஞர் படைக்கு ஈடாக ஏதாவது உண்டா என உரையாற்றியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content