Site icon Tamil News

4 மில்லியன் மக்களின் தகவல்களை திருடிய சைபர் குற்றவாளிகள் ஸ்பெயினில் கைது

4 மில்லியன் மக்களின் தகவல்களை திருடிய 34 சைபர் குற்றவாளிகளை ஸ்பெயின் கைது செய்துள்ளது

நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவுகளைத் திருடுவதற்கும், பணமாக்குவதற்கும் பல்வேறு கணினி மோசடிகளை நடத்திய சைபர் கிரைம் அமைப்பை ஸ்பானிய தேசிய காவல்துறை கைது செய்துள்ளது

நாட்டில் சட்ட அமலாக்கப் பிரிவினர் மாட்ரிட், மலாகா, ஹுல்வா, அலிகாண்டே மற்றும் முர்சியா (Madrid, Malaga, Huelva, Alicante, and Murcia ) ஆகிய இடங்களில் 16 இலக்குத் தேடுதல்களை நடத்தி குற்றக் குழுவைச் சேர்ந்த 34 பேரைக் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சோதனைகள் துப்பாக்கிகள் மற்றும் கை ஆயுதங்கள், நான்கு உயர்தர கார்கள், 80,000 யூரோக்கள் பணம் மற்றும் நான்கு மில்லியன் மக்கள் பற்றிய தகவல்களுடன் தரவுத்தளத்தை வழங்கும் கணினிகள் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் ஃபிஷிங்குடன் தொடர்புடையவர்கள் என்று ஸ்பெயின் காவல்துறை விளக்குகிறது.

Exit mobile version