சீன கப்பலை இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கப்படவில்லை – அலி சப்ரி!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/சீன-கப்பல்-jpg.webp)
ஷி யான் 6 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலை இலங்கையில் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலானது அடுத்தமாதம் இலங்கைக்கு வரவுள்ளதுடன், இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், இந்தியா இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. குறித்த கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டால் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இந்த விடயம் குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த கப்பல் இலங்கையில் நிலைநிறுத்தப்பட அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய செய்திச் சேவையான ஏஎன்ஐயிடம் பேசிய அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
அத்துடன், சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.