இலங்கை செய்தி

வைத்தியர் அருச்சுனாவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவின் பிணை மனு மன்னர் நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து காணொளிகளை பதிவு செய்தமை , கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வைத்தியரை மறுநாள் சனிக்கிழமை கைது செய்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர் , நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியர் அருச்சுனா சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதன் போது வைத்தியசாலை நிர்வாகம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து , பிணை விண்ணப்பத்தை மன்று நிராகரித்தது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!