செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் இரண்டாவது T20 போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 68 ஓட்டங்களும் ஹர்ஷித் ராணா(Harshit Rana) 35 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

இதையடுத்து, 126 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ்(Mitchell Marsh) 46 ஓட்டங்களும் டிராவிஸ் ஹெட்(Travis Head) 28 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

இன்றைய வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளை கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி