ஆஸ்திரேலியாவில் குடியேற்ற அமைப்பில் மீண்டும் மாற்றம் மேற்கொள்ள திட்டம்

ஆஸ்திரேலியாவில் குடியேற்ற அமைப்பில் மீண்டும் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியேற்ற அமைப்பில் நிலவும் பிரச்சனைக்குரிய நிலைமைகள் குறித்து அரசியல் அரங்கில் தீவிர விவாதம் எழுந்துள்ள நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
அதற்கமைய, முந்தைய லிபரல் கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவின் குடியேற்ற முறையில் பல முறிவுகளை உருவாக்கியுள்ளதாக வீட்டுவசதி அமைச்சர் கிளேர் ஓ’நீல் கூறியுள்ளார்.
இரண்டு வருட காலத்திற்குள் எல்லைகளை மூடுவதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக வீட்டுவசதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக, நிகர இடம்பெயர்வு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் குடியேற்ற அமைப்பில் உள்ள பல சிக்கல்களை அடையாளம் காண முடிந்தது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
டாக்டர் மார்ட்டின் பார்க்கின்சனின் மறுஆய்வு அறிக்கை இது பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தியதாக அவர் கருதுகிறார்.