டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை வேட்பாளர் மீது தாக்குதல்

ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், வடகிழக்கு டெல்லியின் காங்கிரஸின் லோக்சபா வேட்பாளரான கன்ஹையா குமார், தேசிய தலைநகரில் பிரச்சாரத்தின் போது ஏழு முதல் எட்டு நபர்களால் தாக்கப்பட்டு அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது.
கிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர், தாங்கள் காங்கிரஸ் தலைவரை தாக்கியதாகவும், நாட்டை உடைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியதாலும், இந்திய ராணுவத்திற்கு எதிராக பேசியதாலும் தாங்கள் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)