சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தினார்.
விடுதலைக்கு தகுதியான கைதிகளின் பட்டியல் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், கைதிகள் தொடர்பான கூடுதல் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிர்வாக நடைமுறைகள் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட கைதிகள் அதன்படி விடுவிக்கப்படுவார்கள் என்று திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியது.





