இந்தியா செய்தி

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற அமிதாப் பச்சன்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது குறித்து இணையத்தில் அதிகம் பேசப்படுகி்றது.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, அவர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதுடன், இது குறித்து பலரும் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மும்பை காவல்துறைக்கும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், பல எதிர்வினைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை அமிதாப் பச்சன் தெளிவுபடுத்தியிருந்தார்.

மும்பை தெருக்களில் படப்பிடிப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கான படப்பிடிப்பு அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை முறையான அனுமதியுடன் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஷூட்டிங் ஆடைகளை தான் அணிந்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த படப்பிடிப்பிற்கு முறையான பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!