விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் – 133 பயணிகள் பலி!

அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டதாக பல இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் மதியம் 1.17 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது.
விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடிய பயணி இருந்தனர். அகமதாபாத்தில் உள்ள மேகனிநகர் பகுதிக்கு அருகிலுள்ள தார்பூரில் இருந்து கடுமையான புகை வெளியேறியது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர், அவசரகால மீட்பு குழுக்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் விபத்து குறித்து பேசினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு அமைச்சர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இன்று முன்னதாக, ஷா, விபத்தைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடனும் பேசினார்.