மாத்தறையில் மிகவும் துணிகரமாக இடம்பெற்ற கொலை

மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தில் இன்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைத்தொலைபேசி விற்பனை செய்யும் இடத்தில் இருந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்களின் அடையாளமோ இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
https://www.youtube.com/watch?v=OB24wMGwG5A&t=41s
(Visited 12 times, 1 visits today)