பிரான்சில் கல்லூரி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்- ஆசிரியர் ஒருவர் பலி!

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் அராஸ் நகரில் கம்பெட்டா கல்லூரியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள அதேவேளை , தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் அல்லாகுஅக்பர் என சத்தமிட்டார் என தகவல்கள் வெளியாகின்றன.சம்பவத்தில் பிரெஞ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு ஆசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் 20வயது செச்னியநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தீவிர இஸ்லாத்துடன் தொடர்புடையவர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.