இலங்கை செய்தி

ஹங்வெல்லவில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை…

இன்று இரவு 09.30 மணியளவில் ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலுவத்துடுவ பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நபர் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நெலுவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீட்டில் இருந்த போது நபர் ஒருவர் வந்து துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், இதற்கு T 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!