ஆஸ்திரேலியா

மீன்களுடன் பாலியல் உறவு.. 58 வயது ஆஸ்திரேலிய பெண்மணி மீது குற்றச்சாட்டு !

மீனுடன் பாலியல் உறவு வைத்ததாக 2 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. இது தொடர்பான விசாரணையும் கோர்ட்டில் பரபரப்பாக நடந்துள்ளது.மிருகங்களுடனான உறவு கொள்வது என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. இதற்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.

விலங்குகளுடன் உறவு வைத்துக்கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி என்கிறார்கள். ஆனால், மிருகத்துடனான புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. பாலியல் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வதற்காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறையாக என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் டாக்டர்கள்.

இந்நிலையில், மீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக, பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு 58 வயதாகிறது.டாஸ்மேனியாவை சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் கேத்தரின் லீ ஜூன்.

மீன்களுடன் பாலியல் உறவு.. 58 வயசு பாட்டியின் அக்கப்போரு.. பக்கத்துலஅது யாரு? கோர்ட்டில் பரபர விசாரணை

மீனுடன் இவர் பாலியல் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.இந்த பாலியல் உறவை வீடியோவாகவும், எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு வந்திருக்கிறார்.இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான அதிர்ச்சி அடைந்து, புகார்களை தர ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியில் இந்த பெண் மீது பல்வேறு வழக்குகள் சேர்ந்துவிட்டன.

நேற்றைய தினம், ஹோபார்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைக்கு கேத்தரின் ஆஜரானார். வழக்கில், பல்வேறு வாதங்கள் நடந்த நிலையில், பிப்ரவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடைப்பட்ட தருணங்களில் இவர் மீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியிருக்கிறது. இதையடுத்து, இதன் அடுத்தக்கட்ட விசாரணையானது, அக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாலியல் வன்கொடுமையில், கேத்தரினுடன் சேர்ந்து இன்னொருவரும் ஈடுபட்டு வந்துள்ளார. அவரது பெயர் ஆஷ்லே டேவிட் ஹலாம் 55 வயதாகிறது. படகிலேயே மீனுடன் இப்படியான செயலை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மீதான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!