இலங்கை முக்கிய செய்திகள்

கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி!

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் வசிக்கும் 24 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞன் நேற்று இரவு கனடா செல்வதற்காக கட்டாரின் தோஹாவுக்கு வந்துள்ளார்.

அவரது கடவுச்சீட்டின் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அனுமதி பெறுவதற்காக விமான நிலைய கவுன்டரில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வேறு ஒருவருக்கு சொந்தமான கனேடிய கடவுச்சீட்டின் பயோ டேட்டா பக்கத்தில் உள்ள தகவல்கள் போலியாக உருவாக்கப்பட்டு இந்த கடவுச்சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இளைஞனின் உறவினர் ஒருவர் இந்நாட்டில் உள்ள தரகர் ஒருவருக்கு 400,000 ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!