உலகம் செய்தி

இஸ்ரேல்-காசா மோதலை தடுக்க தென்னாப்பிரிக்கா தயாராக உள்ளது

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் சூழ்நிலையில் தலையிட தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக போர் நிறுத்தத்தை கோருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் மோதல்களைத் தீர்ப்பதில் தமது நாட்டுக்கு அனுபவம் உள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி, பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களால் ஆழ்ந்து மனமுடைந்து உள்ளதாகவும், தேவைப்படும் மக்களைச் சென்றடைய மனிதாபிமான வழித்தடங்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திறக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவிற்கான மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருளை துண்டித்துள்ளனர், மேலும் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் மீட்கப்பட்டவுடன் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று கூறுகிறார்கள்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!