இந்தியா

விஜய் ஆண்டனியின் மகள் எடுத்த விபரீத முடிவு

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா, தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் லாரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர் தனது துப்பட்டாவில் தூக்கில் தொங்கியதாக தெரிகிறது

விஜய் ஆண்டனி வீட்டின் பணியாளர் இன்று அதிகாலை லாரா தூக்கில் தொங்கியதை பார்த்து உடனடியாக அவருடைய வீட்டார்களிடம் கூறிய நிலையில் உடனடியாக அவர் சென்னை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து இறந்துவிட்டதாக கூறியதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் காவேரி மருத்துவமனை சென்று இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே