இலங்கை செய்தி

இலங்கை வந்த சீன போர் கப்பல்!!! இந்தியா கவலை

அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பல் ஒன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஓராண்டுக்குப் பிறகு சீனாவின் இரண்டாவது கண்காணிப்புக் கப்பல் இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவைக் கவலையடையச் செய்துள்ளது.

இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகைச் செய்திகளின்படி, இந்தியாவின் கவலைகள் காரணமாக போர்க்கப்பல் முன்னதாக வந்ததால், இலங்கை போர்க்கப்பலுக்கான அனுமதியை தாமதப்படுத்தியுள்ளது.

சீனாவின் சந்தேகத்திற்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங்-5’, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் கண்காணிக்கும் திறன் கொண்ட போர்க்கப்பல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையை வந்தடைந்தது.

சீன நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலில் இருந்தபடி 750 கி.மீ. தொலைவு வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும்.

அந்த வகையில், இந்தியாவின் முக்கியமான இராணுவ நிலைகளை உளவு பார்க்க வாய்ப்பு உள்ளதால், இந்தக் கப்பல் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அப்போது அனுமதி வழங்கியது.

See also  இலங்கையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்கும் பங்குச் சந்தை!

தற்போது மீண்டும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பலான ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலின் வருகை குறித்து இந்திய அதிகாரிகளிடம் சீனா தெரிவித்தபோதும், அதன் வருகை குறித்து இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்தக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்கப்பல் வருவதற்கு சீன அதிகாரிகள் முன்கூட்டியே அனுமதி கோரியிருந்தனர். எனினும், இந்தியத் தரப்பினால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் காரணமாக, கப்பலுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கை தாமதம் செய்தது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content