மறுபடியும் இலங்கைக்கு வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தென்னிந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வழியாக தமிழகம் திரும்பிய ரஜினிகாந்த் இன்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” பிரத்யேக ஓய்வறையில் சிறிது நேரம் தங்கினார்.
அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தின் “கோல்ட் ரூட்” பகுதியில் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, அவருடன் தங்கியிருந்தவர்கள் எடுத்த பல்வேறு புகைப்படங்களும் தற்போது பரவி வருகிறது.
கடந்த 14ம் திகதி சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழியாக மாலத்தீவு சென்ற ரஜினிகாந்த், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)