இந்தியா

அரியணையேறுகிறார் தாரிக் ரஹ்மான்: பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. Bangladesh Nationalist Party (BNP) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள தாரிக் ரஹ்மானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற 13வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

சுமார் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் Tarique Rahman தலைமையிலான BNP கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளது.

தாரிக் ரஹ்மான் , பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலீதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி Modi தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது பங்களாதேஷ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான பங்களாதேசுக்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்.”என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உட்பட மேலும் சில நாடுகளும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!