சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.
எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார்.
அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார்.
1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் மீண்டும் வலியுறுத்தினார் நாமல் ராஜபக்ச.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரே அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தம்புத்தேகம.
2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது அரசியல் கூட்டத்தை அங்கிருந்தே நாமல் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.





