புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான திகதியை அறிவித்த ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி

ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தனது புதிய தலைவரை அக்டோபர் 4ம் தேதி தேர்ந்தெடுக்கும் என்று கட்சியின் தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் ஏற்பட்ட பெரும் பின்னடைவுகளுக்குப் பிறகு ராஜினாமா செய்த பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார்.
LDP நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சக்தியாக இருப்பதால், கட்சித் தலைவர் அடுத்த பிரதமராக முடியும்.
1955 இல் தொடங்கப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளும் ஜப்பானை ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
தேர்தல் குழுவின் தலைவர் இச்சிரோ ஐசாவா, செப்டம்பர் 22 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், 12 நாள் பிரச்சார காலத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“டிரம்ப் விஸ்பரர்” என்று அழைக்கப்படும் முன்னாள் உயர்மட்ட இராஜதந்திரி தோஷிமிட்சு மொடேகி, ஜப்பானின் அடுத்த தலைவராக போட்டியிட முதல் வேட்பாளர் ஆவார்.