இலங்கை செய்தி

இலங்கை: ஹர்ஷனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிஷாந்த ஜெயவீர நியமனம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை நிரப்ப நிஷாந்த ஜயவீரவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் இந்தப் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

அதன்படி, வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிஷாந்த ஜயவீரவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றினார், பின்னர் தனது பதவியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக அவர் இவ்வாறு ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content