இலங்கை

இலங்கையில் 20 சதவீதம் வரை குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்?

மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தனுஷ்க பராக்கிரமசிங்க இதனை அறிவித்தார்.

இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு இந்த வாரத்தில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அங்கு மக்கள் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவில் குறைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பராக்கிரமசிங்க, வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் ஏற்கனவே செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content