ஆஸ்திரேலியா உலகம் செய்தி

போண்டி தாக்குதல்: நாளை ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம்

  • December 20, 2025
  • 0 Comments

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக, நாளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற அதே நேரமான மாலை 6.47 மணிக்கு, நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாள் தேசிய […]

ஐரோப்பா செய்தி

UKவில் பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கு 09 ஆண்டுகள் சிறை!

  • December 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு 09 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி எரித்திரிய நாட்டு (Eritrean) புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், மார்கேட் (Margate) கடற்கரையில் தனியாக நடந்து சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமர் முகமது என அறியப்படும் சந்தேகநபர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு  நேற்று கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில் (Canterbury […]

இலங்கை செய்தி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி ரூ. 50 மில்லியன் டொலர் நிதி உதவி

  • December 20, 2025
  • 0 Comments

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசாங்க சேவைகள் நவீனமயமாக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வணிகங்கள் அரசாங்க சேவைகளை ஒரே இணையத்தளத்தின் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும். குறிப்பாக, அரச நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வதற்கும், டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கும் புதிய நவீன தரவுத் தளங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த நிதி […]

உலகம் செய்தி

ஈஸிஜெட் விமானத்தில் இறந்த நிலையில் பயணித்த பெண் – 12 மணிநேரம் காத்திருந்த பயணிகள்!

  • December 20, 2025
  • 0 Comments

ஈஸிஜெட் விமானத்தில் குடும்பம் ஒன்று  இறந்த பயணி ஒருவரை அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து உறவினர்கள் 89 வயதான இறந்த பயணியை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு,  ஊழியர்கள் அந்தப் பெண்ணின் நிலையைப் பற்றி பலமுறை கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் உறவினர்கள் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக பொய்யுரைத்துள்ளனர். விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோதுதான், கேபின் குழுவினர் அந்தப் பெண் இறந்துவிட்டதை அறிந்துள்ளனர். இந்நிலையில் கேட்விக் செல்லும் விமானம் […]

செய்தி விளையாட்டு

அகமதாபாத் டி20: 231 ரன்கள் குவித்து இந்தியா அபார வெற்றி

  • December 20, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்களால் வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, திலக் வர்மாவின் 73 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 231 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய […]

இலங்கை செய்தி

23 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்தாள் “உடரட்ட மெனிக்கே”!

  • December 20, 2025
  • 0 Comments

டித்வா புயலையடுத்து 23 நாட்களாக தடைபட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவை இன்று மீள ஆரம்பமானது. பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதையே பயணத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவால் மலையக ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன. அவற்றை புனரமைப்பதற்குரிய பணிகள் இடம்பெற்றுவருகின்றன. முதற்கட்டமாக பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சர்வமத வழிபாட்டுடன் “உடரட்ட மெனிக்கே” ரயில் பதுளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மலையக […]

உலகம் செய்தி

தைபேயில் கத்திக் குத்துத் தாக்குதல்: 3 பேர் பலி, 11 பேர் காயம்

  • December 20, 2025
  • 0 Comments

தாய்வான் தலைநகர் தைபேயில் நேற்று மாலை கூரிய ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். 27 வயதான சாங் வென் என்ற சந்தேக நபர், தைபேயின் பிரதான மெட்ரோ நிலையத்தில் முதலில் புகை குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பரபரப்பான ஷாப்பிங் பகுதியில் உள்ள மற்றொரு நிலையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகக் கத்திக் குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலை அடுத்து, அந்த நபர் ஆறு […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய நிழல் கடற்படை கப்பல் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

  • December 20, 2025
  • 0 Comments

மத்தியதரைக் கடலில் ரஷ்ய “நிழல் கடற்படை” எண்ணெய் டேங்கரான கென்டிலைத் தாக்க முதன் முறையாக  வான்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன்  கூறியுள்ளது. SBU பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தினார். லிபியாவின் கடற்கரையிலிருந்து  2,000 கி.மீ.க்கு தொலைவில் இருந்த கப்பலை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும் பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யா பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இதன்மூலம் பெறப்படும் நிதி போரை தொடர்ந்து […]

இந்தியா உலகம் செய்தி

அசாமில் பயங்கரம்: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி

  • December 20, 2025
  • 0 Comments

அசாம் மாநிலம் ஹொஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று அதிகாலை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயில், யானைகள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், ஒரு யானை பலத்த காயமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலின் தாக்கத்தால் ரயிலின் இயந்திரம் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என இரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.17 மணியளவில் […]

உலகம் ஐரோப்பா செய்தி

லண்டன் கிறிஸ்துமஸ் தினக் கொலை: அந்தோணி கில்ஹீனி குற்றவாளி எனத் தீர்ப்பு

  • December 20, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் (West End) பகுதியில் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி, ஒருவரைக் கொலை செய்தும் மேலும் பலரைக் காயப்படுத்திய நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2024 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பில் மெற்றோபொலிட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, 31 வயதான அந்தோணி கில்ஹீனி (Anthony Kilheeny) என்பவர் […]

error: Content is protected !!