Site icon Tamil News

பிரித்தானியாவில் தற்காலிகமாக மூடப்படும் 150 பள்ளிகள்..!

பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக கிட்டத்தட்ட 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கோடை விடுமுறைகள் நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கிடையில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மோசமான கான்கிரீட் தள கட்டிடங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தகைய பள்ளி கட்டிடங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழுந்து விடலாம் என்ற அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிரித்தானியாவில் மோசமான கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பள்ளிகளின் இந்த தற்காலிக மூடல் காரணமாக மாணவர்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாற்று இடத்தில் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியாவின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கில்லியன் கீகன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version