இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பொறுப்பில் இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் (2004 – 2006) பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன்   கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2006ஆம் ஆண்டு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அதன் போது பேராசிரியர் கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இச்சம்பவம் இடம்பெற்று சுமார் 19 வருடங்களின் பின்னர், இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!