ஆப்பிரிக்கா

நைஜீரியாவின் பெனு மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் 74 பேரைக் கொன்று குவித்துள்ளது

நைஜீரியாவின் பெனு மாநிலத்தில்  இந்த வாரம் ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற  இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல்காரர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான வன்முறைகள் பொதுவாகக் காணப்படும் பகுதியில் சமீபத்திய மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை Mgban உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமில் 28 சடலங்கள் மீட்கப்பட்டதாக பெனு மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர்கேத்தரின் அனீன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம்  என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் துப்பாக்கிதாரிகள் வந்து சுடத் தொடங்கியதாகவும், பலரைக் கொன்றதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு