இலங்கை செய்தி

குப்பி விளக்கால் ஆறு மாத குழந்தை பலி – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் குப்பி விளக்கு கவிழ்ந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 மாத குழந்தை எரிந்து ஆபத்தான நிலையில் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இரவு தேராவில் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது குப்பி விளக்கு தீப்பிடித்து எரிந்த நிலையில் சிசுவின் உடல் எரிந்து ஆபத்தான நிலையில் தருமபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிசுவை மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பலத்த தீக்காயங்கள் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.

பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(Visited 14 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை