ஐரோப்பா செய்தி

கனவு நகரமான பாரிஸ் குப்பை நகரானது – கடும் நெருக்கடியில் மக்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது.

பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம். ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும்.

எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன.

பிரான்சில் ஓய்வு வயதை 57லிருந்து 59க்கு உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பள உயர்வு கேட்டும் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கும் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதால், ஒரு சில சுற்றுப்பயணிகள் துர்நாற்றம் குறித்துக் குறைகூறினர்.

இன்னும் சிலர் அது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் குறிப்பதாகத் தெரிவித்தனர்.

 

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!