இந்தியா செய்தி

இந்தியாவின் தமிழ்நாட்டில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி, 16 பேர் காயம்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் புதன்கிழமை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்திருக்கலாம் மற்றும் 16 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மேலும் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, காயமடைந்தவர்களில் 13 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!