ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரத்திலுள்ள விமனாப்டை முகாமில் முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதெனவும், இந்த நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் உதவ வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தான் அதிபராக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கபோவதில்லை என அவர் தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)





