யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ; தீயாய் பரவும் படங்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
அந்த பதிவில், “பள்ளிப் பருவத்தில் நான் மனதிற்குள் ஆசைப்பட்ட ஒரு விஷயம் இப்போது நிஜமாகிவிட்டது.
இந்தச் சாக்கைக் காட்டி பள்ளியை ‘கட்’ அடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன்.

வாழ்க்கையில் நாம் என்ன விரும்புகிறோமோ அதில் கவனமாக இருக்க வேண்டும், மேலும், சமீபத்தில் Pickleball விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நண்பர்களே, கவலைப்பட வேண்டாம்… இது ஒரு சிறிய காயம் தான். இதுவும் கடந்து போகும்,” என்று தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.






