டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!
டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Unit) இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினரால் (military) டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல் ரக pistol gun துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி 2019 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்டத்துக்குட்பட வெலிவேரிய பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே சிற்றோடையொன்றுக்கு அருகில பாழடைந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணை பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவந்தது.
அதன் அடிப்படையிலேயே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மாலை முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





