இலங்கை செய்தி

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Unit) இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டது.

குறித்த அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினரால் (military) டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல் ரக pistol gun துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி 2019 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்டத்துக்குட்பட வெலிவேரிய பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே சிற்றோடையொன்றுக்கு அருகில பாழடைந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணை பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவந்தது.

அதன் அடிப்படையிலேயே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மாலை முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!