பொழுதுபோக்கு

8 நிமிட இடைவேளை குறித்து ‘லியோ’ தயாரிப்பாளரின் மாஸ் அப்டேட்

‘லியோ’ படத்தை பார்த்த தயாரிப்பாளர் லலித்குமார் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். இந்த படத்தில் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே சஞ்சத் மற்றும் அர்ஜூன் ஆகிய இருவரின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

‌ இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், விஜய்யின் திரைப்பயணத்தில் ‘லியோ’ திரைப்படம் சிறந்த படமாக இருக்கும். படத்தின் 8 நிமிட இடைவேளை காட்சியை பார்த்தபோது எங்களுக்கே கூஸ்பம்ப்ஸ் ஆனது. கண்டிப்பாக படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!