Site icon Tamil News

பொலிஸரிடமிருந்து தப்பியோடிய 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

La Courneuve நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

5 மணி அளவில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிப்பதையும், சிவப்பு சமிக்ஞையை மதிக்காமல் செல்வதையும் பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.எனினும் அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்ததால் காவல்துறையினர் இளைஞனை துரத்திச் சென்றனர்.

இந்நிலையில் Garges-lès-Gonesse வீதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version