அரசியல் இலங்கை செய்தி

2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை: சஜித் சுட்டிக்காட்டு!

  • December 24, 2025
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (24) தெரிவித்தார். எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார். ஹெம்மாத்தகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் ஏழு பேர் கைது! போண்டி தாக்குதலுடன் தொடர்பா?

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரிடம் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. அந்தவகையில் சிட்னி, லிவர்பூல் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது குழுவொன்றை சேர்ந்த எழுவர் நியூ […]

ஆஸ்திரேலியா உலகம்

சிட்னி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஷஸ் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

சிட்னி போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளில் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸட் போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் இன்று ஆரம்பமானது. இதனைமுன்னிட்டு தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை பார்வையிட வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு சமூக அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக உளவு […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் வைத்தியசாலையில் […]

ஆஸ்திரேலியா செய்தி

பசுபிக் பிராந்திய பாதுகாப்பு: ஆஸ்திரேலியா புது வியூகம்!

  • December 13, 2025
  • 0 Comments

பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடலுக்கடியில் மூன்று கேபிள் இணைப்புத் திட்டங்களை கூகுள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்குரிய நிதி உதவியை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. மேற்படி கேபிள் திட்டமானது பப்புவா நியூ கினியாவின் டிஜிட்டல் துறையில் புரட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பப்புவா நியூ கினியா உட்பட பசுபிக் பிராந்தியத்தில் தனத செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு சீனா தீவிர் காட்டிவருகின்றது. பப்புவா நியூ […]

ஆஸ்திரேலியா இலங்கை செய்தி விளையாட்டு

U-19 ஆஸி அணியில் இரு இலங்கை வீரர்கள்!

  • December 12, 2025
  • 0 Comments

2026 இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐசிசி உலகிக் கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணி விபரத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். நாதன் குரே, நிதேஸ் சாமுவேல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நியூ சவூத் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்தியா மற்றும் சீனா வம்சாவளி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உள்ள பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ண தொடர் நமீபியா மற்றும் சிம்பாப்வே […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பென்டகனில் நடைபெற்ற முத்தரப்பு பாதுகாப்பு கூட்டம்!

  • December 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. பென்டகன் எனப்படும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்திலேயே முத்தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆக்கஸ் (AUKUS) எனப்படும் பாதுகாப்பு கூட்டணியில் மேற்படி மூன்று நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ளது. இதற்குரிய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணக்கம் வெளியிட்டிருந்தன. எனினும், அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற கொள்கையால் இத்திட்டம் […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ!

  • December 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் காட்டுத் தீயும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 30 வருடங்களாக அத்துறையில் சேவையாற்றிய 59 வயதான தீயணைப்பு வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. நியூகேஸில் இருந்து சுமார் 90 கிமீ வடக்கே நெரோங் அருகே தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்தே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. நியூ சவூத் வேல்ஸ் […]

அரசியல் ஆஸ்திரேலியா

புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்திய செனட்டர் இடைநீக்கம்!

  • November 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து சர்ச்சையை ஏற்படுத்திய வன் நேஷன் கட்சி தலைவர் செனட்டர் பவுலின் ஹான்சன், செனட் சபை அமர்வில் பங்கேற்பதற்கு 7 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆடை கலாசாரத்தை செனட்டர் ஹான்சன் கடுமையாக விமர்சித்துவருபவர். பொது இடங்களில் முகத்தை மூடிய ஆடைகள் அணிவதை தடை செய்யுமாறு அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அது கைகூடவில்லை. இந்நிலையிலேயே நேற்று செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் செயல் அப்பட்டமான இனவெறி […]

error: Content is protected !!