இலங்கை

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் திடீர் சோதனை நடவடிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (08.09) திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்,  திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி,  உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெறும் பீ.எஸ்.எஸ்.பீ செயற்றிட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களினால் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய மருந்து விநியோகப் பிரிவினை குறித்த வைத்தியசாலைக்கு இடம் மாற்றுவதை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  வைத்தியசாலையிலிலுள்ள உபகரணங்களின் நிலைமை மற்றும் பாவனைக்குட்படுத்தப்படும் நடைமுறைகள் தொடர்பிலும் நேரடி அவதானம் செலுத்தப்பட்டது.

குறித்த விஜயத்தின்போது கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளையும் சிபாரிசுகளையும் விரைவில் செய்வதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இதனை விரைவுபடுத்துமாறும் பணிப்பாளர் குறித்த குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்