பொழுதுபோக்கு

சுதா கொங்காரா – சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த சோதனை

அமரன் படம் அடித்த ஹிட்டால் சிவகார்த்திகேயன் டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறார். இப்பொழுது ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் பின் அவர் சுதா கொங்காராவின் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் சில காலம் தள்ளிப் போகிறது.

சுதா கொங்காரா இந்த படத்திற்கு ஆர்டிஸ்ட் தேடும் வேலையில் முழுவதுமாக இறங்கி உள்ளார். ஹிந்தி மொழிக்கு எதிரான படம் என்பதால் இதில் பலபேர் நடிக்க தயங்கினார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் இதில் துணிச்சலுடன் களமிறங்க காத்திருக்கிறார். இந்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்திற்காக சுதா கொங்காரா மெனக்கெட்டு வருகிறார்.

இந்த படத்திற்காக ஆரம்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரோ எனக்கு நடிப்பு வேண்டாம் என இதிலிருந்து விலகி விட்டார். அதன் பின்னர் மலையாள நடிகர் நிவின்பாலி இதில் வில்லனாக நடிப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் வெளிவந்தது.

இப்பொழுது நிவின் பாலி இந்த படத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது அதற்கு பதிலாக மலையாள சேட்டன் நடிப்பு ராட்சசன் பகத் பாசில் வில்லனாக நடிக்கப் போகிறார். ஆரம்பத்தில் இந்த படத்தில் அவர்தான் முதலில் கமிட் ஆனவர். டிசம்பர் மாதம் புறநானூறு படம் சூட்டிங் ஆரம்பிக்கும் யோசனையில் இருந்து வந்தார் சுதா கொங்காரா.

சிவகார்த்திகேயன் இப்பொழுது இருக்கும் பிசியான நேரத்தில் இந்த படம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்க முடியாது என்றும் இது ஓரிரு மாதங்கள் தள்ளிப் போவதாக அறிவிப்பு வெளிவருகிறது. இதனால் பகத் பாசில் கமிட் செய்து வைத்திருந்த படங்களை முடிப்பதற்கு வசதியாக இருந்தது. இப்பொழுது அவரது கால் சீட் பிரச்சினை இல்லாமல் கிடைத்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்