இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தனது நோக்கத்தை வெளியிட்ட நாமல்

இலங்கையில் அரசியல்வாதிகளின் முடிவுகளை விட மக்களின் தீர்மானமே முக்கியமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது கொடுக்கல் வாங்கல்கள் மக்களுடன் உள்ளன. எனது கொள்கைகளும் மக்கள் சார்ந்ததாகவே உள்ளன. மக்களுக்குச் சேவை செய்வதே எமது நோக்கமாகும்.

அவ்வாறு இல்லாமல், கட்சித் தாவும் அரசியல்வாதிகளுக்குச் சேவை செய்வது எமது நோக்கமல்ல.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து, மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்படும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!