இலங்கை

இலங்கை- 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

9 வயது மற்றும் 6 மாத வயதுடைய மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல காவல் பிரிவின் எகொடவத்த ஒக்கம்பிட்டிய வீதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

பாடசாலை குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் சிறுமி கல்வி பயிலும் பாடசாலையில் நடத்தப்பட்டது.அதன்பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார். இது தொடர்பில் தாயார், புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

2024 நவம்பர் மாதம் ஒரு நாள் பாடசாலை முடிந்ததும், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுமி, தனது நண்பியின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியிலேயே தானும் செல்வதாக கூறி, வீட்டில் விட்டு செல்வதாக, அச்சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ஓர் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

புத்தல பேருந்து நிலையத்தில் கடமையில் மகளிர் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவால் சந்தேக நபர், கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், வெல்லவாய மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எல்.மஞ்சுள ரத்நாயக்க அவரை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க பிணையில் விடுவித்து, சாட்சிகளை அச்சுறுத்த வேண்டாம் என்று எச்சரித்தார். வழக்கு 10வது மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்