இந்தியா

சோனியா காந்தி, ராகுல் காந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மும்பையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

ஆனால் அவர்கள் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டபின் டெல்லிக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே