வட அமெரிக்கா

கனடாவில் குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

கனடாவின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.இந்த தகவல்களின் அடிப்படையில் டொரன்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஸ்காப்ரோ டான்சிங் மற்றும் மார்னிங் சைட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 25 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்