பொழுதுபோக்கு

முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சாய் அபயங்கர்

சாய் அபயங்கர் இசையில் முதன்முறையாக திரைக்கு வந்துள்ள திரைப்படம் பல்டி. அப்படத்திற்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம்.

அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள வேலம்பாளையம் என்ற ஊரில் எதற்கும் துணிந்த நான்கு நண்பர்களின் கதையைச் சொல்கிறது.

இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தமிழிலும் தெலுங்கிலும் பிரபலமான சாய் அபயங்கர், ‘பல்டி’ மூலம் முதல்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

இந்தப் படத்தில் அவர் பாடிய ‘ஜாலக்காரி’ என்ற பாடல் ஹிட் சார்ட்களில் இடம்பிடித்திருந்தது. சொல்லப்போனால் சாய் அபயங்கர் இசையில் வெளியான முதல் படம் இந்த பல்டி தான்.

இந்த நிலையில், பல்டி படத்திற்காக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி பல்டி படத்திற்காக சாய் அபயங்கர் ரூ.2 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.

மலையாள திரையுலகில் இதுவரை எந்தஒரு இசையமைப்பாளரும் வாங்காத தொகை அது. அதேபோல் தமிழில் ஜிவி பிரகாஷ், யுவன் ஆகியோரே அந்த அளவுக்கு தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

ஆனால் சாய் அபயங்கர் முதல் படத்திலேயே அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது விவாதப் பொருளாக மாறி உள்ளது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்