அமேசானில் 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வறண்டு காணப்படும் நதிகள்

பிரேசிலின் அமேசான் பகுதிகளில் நதியோரம் வசிப்பவர்களுக்கு வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
அமேசான் காடுகளின் வழியாக நெடுந்தூரம் ஓடும் ஆறுகளில் கடந்த 10 ஆண்டில் இரண்டாவது முறையாக வறட்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலிமோஸ் பிரமாண்ட நதி வறண்டு கிடப்பதால் மக்கள் நடந்து செல்கின்றனர்.
உள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு ஆறுகளை கடந்து சென்ற ஆசிரியர்கள் தற்போது மலைப்பாங்கான பகுதிகள் வழியாக தங்களது பணிகளுக்கு செல்கின்றனர்.
(Visited 16 times, 1 visits today)