இலங்கை செய்தி

மாடுகளை கடத்துபவர்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க தீர்மானம்

மாடுகளை கடத்துபவர்களுக்கான அபராதத் தொகையை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன், இவ்வாறான திருட்டுக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, தற்போதைய விலங்குகள் நலச்சட்டத்தின்படி கால்நடை கடத்தப்படுவதற்கான அதிகபட்ச அபராதம் 50,000 ரூபாவாகும், மேலும் சிறைத்தண்டனை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதன்படி விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கால்நடை அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது கறவை மாடுகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் வேண்டுகோளுக்கிணங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விலங்குகள் நலச் சங்கப் பிரதிநிதிகள் குழுவுடன் நடத்திய கலந்துரையாடலில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content