ஆசியா

பங்களாதேஷில் இரண்டு இடங்களில் சிறைகளை உடைத்து கைதிகள் தப்பியோட்டம்

பங்ளாதேஷில் அண்மைய சம்பவங்களாக மேலும் இரண்டு இடங்களில் சிறைகளை உடைத்துக் கொண்டு ஏராளமான கைதிகள் தப்பியோடிவிட்டனர்.

ஷேக் ஹசினா பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டில் சட்ட, ஒழுங்கை நிலைநாட்ட கடுமையாகப் போராடி வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் திகதி ஜமாபூர் சிறையில் சிறைக் காவலர்களை கைதிகள் தாக்கியதால் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறை அதிகாரி அபு ஃபாடா ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

“இரும்புத் தடி, கூரான ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் எங்களைத் தாக்கினர். அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அதன் பிறகு 600 கைதிகளை விடுவிக்க அவர்கள் முயற்சி செய்தனர்.

“நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று. குறைந்தது ஆறு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 6ஆம் திகதி டாக்காவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காஷிம்பூரில் கடுமையானப் பாதுகாப்புக் கொண்ட சிறையிலிருந்து கைதிகள் தப்ப முயற்சி செய்தபோது ஆறு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதன் அதிகாரி லுட்ஃபார் ரஹ்மான் கூறினார்.இந்தச் சம்பவத்தில் குறைந்தது 203 கைதிகள் தப்பியிருக்கலாம் என்றார் அவர்.

கடந்த ஜூலை மாதம் மத்திய மாவட்டமான நர்சிங்டியில் உள்ள சிறையிலிருந்து 800க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர். பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகிய ஆகஸ்ட் 5ஆம் திகதி, ஷெர்பூரில் உள்ள சிறையிலிருந்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிவிட்டனர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!