இலங்கை

இலங்கை ஜனாதிபதிக்கு கிடைத்த பாராட்டு!

ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் தங்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவைத் தன்னிச்சையாகக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டு, தங்களுக்கு சாதகமான தீர்வை வழங்கியமைக்கு இந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமல் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைகளில் வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவைக் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிராகக் கடந்த வாரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருடனான சந்திப்பையடுத்து, அந்த தீர்மானத்தை ஒத்திவைத்தது.

அதற்கமைய, வரவு செலவு திட்டம் தொடர்பான இறுதி வாக்கெடுப்பு இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தை ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனிடையே, வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, தங்களது கோரிக்கையை அவ்வாறே செயற்படுத்துவதாக ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகவும், அதற்காக அவருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமல் விஜேசிங்க அறிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்