பாராளுமன்ற உறுப்பினர் ஃபௌசியின் மகன் கைது

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஃபௌசியின் மகனை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாகன விபத்தை ஏற்படுத்தி வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பாடசாலை மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றின் பின்னர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபரான ஏ.எச்.எம்.பௌசியின் மகனைக் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)